Friday, August 31, 2007

மௌன வரிகள்


தேனினைப் போலே
இனியதெது
தெளிந்த நல்லறிவுக்கு
ஏற்றதெது
மானிட மொழிகளில்
உயர்ந்ததெது
மௌனமே அல்லாது
வேறெதது

தூணிணைப் போலே
அமைதியினைத்
தூக்கி நிறுத்துவதப்
பேரழகு

வேணும் போதே
வாய்திறந்தால்
வேதனை ஒண்டாது
அன்புநெஞ்சே

அன்புடன் புகாரி

No comments: