Friday, August 31, 2007

புறப்படு

புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக்
கடலையே சேர்கின்றன

முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்

சறுக்கில்லா கவனமும்
பூட்டில்லா செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்

கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்

திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி



அன்புடன் புகாரி

No comments: