புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக்
கடலையே சேர்கின்றன
முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்
சறுக்கில்லா கவனமும்
பூட்டில்லா செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்
கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்
திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி
அன்புடன் புகாரி
Friday, August 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment