கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி
கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி
நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து
பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து
துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய்
இறங்கி
வளர்முத்த வெறிகொட்டும்
உயிர் வெள்ள நயாகரா
அன்புடன் புகாரி
Saturday, September 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment