அற்புதச் சிற்பவிழி
பூஞ் சிற்றிடைப் பேரெழிலி
கற்பனைச் சிற்பியின்
முற்றிய நற்றமிழ்
ஏற்றிய தீபவொளி
எனைச் சுற்றிவா சிற்றருவி
சந்தனத்தில் நீராடி
நந்தவனப் பூச்சூடி
வந்துநிற்கும் என்தேவி
என் உயிரின் உயிரும் நீதான்டி
காலைப்பனி ஈரத்திலே
சேலைவனப் பூந்தளிரே
வாழையாய் நீயசைய
உயிரைக் கிள்ளுதடி
உன்னை
மாலையாய் அள்ளியணிய
கைகள் துள்ளுதடி
ஊருறங்கும் நேரத்திலே
யாருமற்றத் தீவினிலே
போர் தொடுக்கும்
உந்தன் நினைவில்
தீயாகிப்போனேன்
என்னைக்
கார் கூந்தல் மழை பொழிந்து
காப்பாற்று கிளியே
அன்புடன் புகாரி
Saturday, September 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment