என் இருத்தலின்
அகராதிகள்
எனக்கான
என் பயணங்கள்
என் மூச்சுக் காற்றுக்குச்
சூடு தரும் சக்திகள்
என்னை எனக்கே
அடையாளம் காட்டும்
கைகாட்டிகள்
என் வலிமையோடு
என் வலிமையைப்
போரிட வைக்கும்
தளபதிகள்
முகத்திரைகளற்ற
என் முகங்கள்
என் சொற்களில்
சுகப்படாத
என் தேடல்கள்
தனிமைக் குகைக்குள்
என்னைத்
தாகத்தோடு அடைத்து
மீண்டுவர பல
ஆண்டுகள் ஆக்கிவிடும்
பூதங்கள்
எனைச் சாகடிக்கும்
மரண நெருக்கடிகள்
சாகாமல் வாழவைக்கும்
உயிர்த் துளிகள்
என் வாழ்வுப் பாதையில்
என்னை எனக்குமுன்
நானே நிறுத்தி விசாரித்த
என் விசாரிப்புகளுக்கு
வெகுமதிகளாய்க்
கவிதைகளைத் தந்த
படைப்பாளிகள்
அன்புடன் புகாரி
Saturday, September 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment